விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா – சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அவசர உத்தரவு!

Published by
Rebekal

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் தற்பொழுது கொரோனா பரவி வருவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தற்போது அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனாவின் வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மனிதர்களுக்கே ஆக்சிஜன் இல்லாமல் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மாநில அரசுகள் திணறி வரும் சூழ்நிலையில் தற்போது விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் வைரஸ் காரணமாக ஆசிய சிங்கங்கள் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கான தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் விலங்குகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அனைத்து மாநிலங்களும் மூடுமாறு ஆலோசனை வெளியிட்டுள்ளது. மேலும் தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனிதர்களை மட்டுமே தாக்கி வந்த கொரோனா தற்பொழுது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி விலங்குகளையும் பாதித்து வருவதால் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் மூடுவது பாதுகாப்பான ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago