விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா – சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அவசர உத்தரவு!

Published by
Rebekal

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் தற்பொழுது கொரோனா பரவி வருவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தற்போது அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனாவின் வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மனிதர்களுக்கே ஆக்சிஜன் இல்லாமல் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மாநில அரசுகள் திணறி வரும் சூழ்நிலையில் தற்போது விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் வைரஸ் காரணமாக ஆசிய சிங்கங்கள் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கான தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் விலங்குகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அனைத்து மாநிலங்களும் மூடுமாறு ஆலோசனை வெளியிட்டுள்ளது. மேலும் தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனிதர்களை மட்டுமே தாக்கி வந்த கொரோனா தற்பொழுது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி விலங்குகளையும் பாதித்து வருவதால் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் மூடுவது பாதுகாப்பான ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஜில் ஜில்..! கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஜில் ஜில்..! கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என…

16 minutes ago

பேவாட்ச் தொடரின் பிரபலம் பாமெலா பாக் தற்கொலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த ஹாலிவுட் சினிமா!

ஹில்ஸ் : பிரபலமான பேவாட்ச் (Baywatch) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அமெரிக்கன் நடிகை பாமெலா பாக் (Pamela…

27 minutes ago

விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!

டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…

51 minutes ago

தமிழகத்தில் இதை செய்யுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த அமித்ஷா!

சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…

4 hours ago

CISF 56-வது ஆண்டுவிழா…6,553 கி.மீ சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்த அமித்ஷா!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…

4 hours ago

Live : CISF-ன் 56வது ஆண்டுவிழா முதல்…, தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் வரை..,

சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…

5 hours ago