இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் கடந்த 24 மணி நேரத்தில் 3,449 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் பலி எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் 3,20,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,66,13,292 பேர் குணமடைந்து உள்ளனர். 34.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 81.91%, உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09%, தற்போது சிகிச்சை பெறுவோரின் விகிதம் 16.99% ஆக இருக்கிறது.
மேலும் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 16,63,742 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…