கொரோனாவால் இந்தியாவில் நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர் – பாதிப்பு எவ்வளவு?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனாவால் இந்தியாவில் நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் 87,382 பாதிக்கப் பட்டுள்ளதுடன், 1135 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் 5,485,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 87,909 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 4,392,650 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 1,005,053 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.