ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்டது இந்திய விமானப்படை விமானம்…

Published by
Kaliraj

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக  காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர். அதில், ஈரானில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் மூலம் சி -17 குளோப்மாஸ்டர் III என்ற போக்குவரத்து விமானம் தயாராகிறது. இந்த விமானம் இன்று புறப்படுவதாக உள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குளோப்மாஸ்டர் விமானம், நேற்று  இரவு 8.30 மணிக்கு காசியாபாத்திலிருந்து கிளம்பி சென்றது. இன்று  அதிகாலை 2 மணிக்கு தெஹ்ரான் செல்லும் விமானம், அங்கிருக்கும் இந்திய பயணிகளை அழைத்துக் கொண்டு, 4.30 மணிக்கு இந்தியா கிளம்பும். காலை 9.30 மணிக்கு விமானம் காசியாபாத் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிக்கியுள்ளோரின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Recent Posts

வெறும் காகிதம் மாதிரி இருக்கு! பட்ஜெட் அறிவிப்பு…அண்ணாமலை விமர்சனம்!

வெறும் காகிதம் மாதிரி இருக்கு! பட்ஜெட் அறிவிப்பு…அண்ணாமலை விமர்சனம்!

சென்னை :  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

14 minutes ago

பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…

2 hours ago

தமிழக பட்ஜெட் 2025 : மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு.., மொத்த விவரம் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

3 hours ago

இவர்களுக்கு மாதம் ரூ.2,000… பெண்களுக்கான முக்கிய திட்டங்கள் என்னென்ன?

சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…

4 hours ago

கல்வி கடன் ரத்து..ஓய்வூதியம்..? பட்ஜெட்டில் ஒன்னுமே புதுசா இல்ல – இபிஎஸ் காட்டம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…

4 hours ago

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

5 hours ago