மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று

Default Image

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்