தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

மும்பை, தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 1,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,09,096 ஆக அதிகரித்துள்ளது. அதில் 6,090 பேர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,531 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 113 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்