ஓமைக்ரான் மத்தியில் 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Published by
murugan

மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் கடந்த 3-4 நாட்களாக 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் கடந்த 3-4 நாட்களாக 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு RT-PCR சோதனையை நாங்கள் நடத்தி வருகிறோம் என்று போசலே மேலும் கூறினார். மஹாராஷ்டிராவில் ஓமைக்ரான் பரவி வரும் மத்தியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,410 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,54,755 ஆக உள்ளது என்றும் கொரோனா இறப்பு எண்ணிக்கை 141,404 ஆக உள்ளது என மாநில சுகாதாரத் துறை நேற்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 ஆக உள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.  நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 115 பேர் குணமடைந்து விட்டதாகவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

19 minutes ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

21 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago