தெலுங்கான மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சிலர் மீண்டும் வந்துள்ளனர். அந்த வகையில் தெலுங்கானாவில் தொழில்துறை மந்திரியாக இருந்து வருபவர் மல்லா ரெட்டி. கடந்த வாரம் இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின் படி மல்லா ரெட்டி தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, தனக்கு நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சூழலில் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும், யாரும் கவலைப்பட கூடாது என்று கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…