நடிகை நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொன்டுள்ளார்.
திரைப்பட நடிகையும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நக்மாவிற்கு தற்போது கொரொனோ தொற்று உறுதியாகியுள்ளது.
நக்மா ஏப்ரல் 2ம் தேதியன்று கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் போட்டுக்கொண்டார்.இதற்கிடையில் அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.
இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.எனவே, தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொன்டுள்ளதாக நக்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி நக்மா ட்விட்டரில் கூறியதாவது,”சில நாட்களுக்கு முன்புதான் எனது முதல் அளவு தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.இருப்பினும் எனது உடல்நிலை தற்போது சரியில்லாத காரணத்தால் கோவிட் -19 பரிசோதனை செய்துகொண்டேன்,ஆனால் எனது சோதனை பாசிடிவ் என வந்துள்ளது.
எனவே என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைவரும் தயவுசெய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தடுப்பூசியின் முதல் அளவு எடுத்த பிறகும் கூட எந்த வகையிலும் மனநிறைவைப் பெறாமல், பாதுகாப்பாக இருங்கள் “என்று கூறினார்.
நக்மாவின் ட்வீட்டிற்கு பதலளித்துள்ள காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி, “விரைவில் உங்கள் உடல்நிலை சரியாக வேண்டிக்கொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…