பெங்களூரில் 1200 -க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Published by
Rebekal

பெங்களூரில் முன்கள பணியாளர்களாக சேவை செய்யக்கூடிய ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடந்து தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவிலேயே காணப்படுகிறது.

பெங்களூரிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது வரை பெங்களூரில் சுமார் 1,221 காவலர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் 11 காவலர்கள் கொரோனாவின் இரண்டாம் அலையில் பெங்களூரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பெங்களூரில் உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து 803 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்கள் பலருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

51 seconds ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

8 minutes ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

1 hour ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

2 hours ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

2 hours ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

3 hours ago