5.66 லட்சத்தை எட்டியது கொரோனா!

இந்தியாவில் 5.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்திற்குள் 5,48,318லிருந்து 5,66,840ஆக உயர்ந்துள்ளதாகவும்,மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723லிருந்து 3,34,822ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475லிருந்து 16,893ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.