இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! ஒரே நாளில் 37,875 பேருக்கு தொற்று உறுதி…!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 369 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,96,718 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 6,653 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,30,96,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 369 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,41,411 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,114 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,22,64,051 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,91,256 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 70,75,43,018 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 78,47,625 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்