கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 75 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் 75 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 42,77,584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 72,816 பேர் உயிரிழந்துள்ளனர்.
33,21,420 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 8,83,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 75,022 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.