கேரளாவில் 4வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Default Image

கேரள மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக 30 ஆயிரத்தை கடந்து தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 22,468 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 153 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20,466 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் குணமடைந்து இதுவரை 37,51,666 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா சிகிச்சையில் 2,04,086 பேர் உள்ளனர்.  கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்