கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது – பிரதமர் மோடி

Published by
லீனா

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூற வேண்டும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின், பிராமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,  டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசிய கோடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு தேசிய கோடியை ஏற்றி வைத்த பிறகு ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன.

அதன்பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை தொடங்கினார். மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூற வேண்டும். நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூறுவதற்கான தினம் இன்று. பிரிவினையால் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மரியாதை செலுத்துவோம்.

கொரோனா காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். கொரோனா மனித குலத்திற்கு மிகப் பெரும் சவாலாக மாறியது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது. போலியோ தடுப்பூசியை பெறுவதற்கு நமக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பூசி அப்படி அல்ல,. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கட்டமைப்பு குறைவாக இருந்தாலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நம் நாட்டின்  உள்கட்டமைப்பு எந்த நாட்டை விடவும் குறைவானவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நமது லட்சியங்களை அடைய கடினமான உழைப்பை செலுத்த வேண்டும். ஒரு வினாடி கூட வீணடிக்காமல் உழைக்க தொடங்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் நாம் இலக்கை அடைய ஒரு வினாடி கூட வீணாக்க கூடாது. வளர்ச்சிப் பாதையில் நம் நாடு மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. மருத்துவ வசதி உள்ளிட்டவை மக்களை வேகமாக சென்றடையவேண்டும். உஜ்வாலா முதல் ஆயுஷ்மன் பாரத் திட்டம் வரை பல்வேறு திட்டங்கள் ஏழைகளுக்கு உதவியாக இருக்கின்றன.

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்களுக்கு கைகளை தட்டி பாராட்டுகளை தெரிவித்தார். ஒலிம்பிக்கில் வீரர்கள் திறமையுடன் விளையாடி பெருமை சேர்த்தனர். வருங்கால தலைமுறையினருக்கு உற்சாகம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Published by
லீனா

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

9 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

18 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago