கடந்த மாதம் 1-ஆம் தேதி தான் கேரளாவில் பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்ட நிலையில், அதற்குள் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இருப்பினும் கொரோனாவின் வீரியம் சற்றே குறைந்து உள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிக் கூடங்களைஅரசாங்கம் திறந்துள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த மாதம் 1ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மரமஞ்செடி மற்றும் வன்னேரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள 262 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரமஞ்சரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 148 மாணவர்களுக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 39 ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அது போல இந்த பள்ளிக்கு 6 கிலோ மீட்டர் அருகில் உள்ள வன்னேரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 39 மாணவர்கள் மற்றும் 36 ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுளளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…