பாட்னாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசர மருத்துவ சிகிச்சை பெற கொரோனா நோயாளிகள் வரிசையில் நிற்கிறார்கள். முதல் கொரோனா வைரஸ் அலையுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது அலை கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்ல, மருத்துவர்களும், சுகாதார ஊழியர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இரண்டு முன்னணி மருத்துவமனைகளில் 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மருத்துவமனைகளில் ஓன்று எய்ம்ஸ் மருத்துவமனை மற்றோன்று பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்.
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்தார். பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 70 மருத்துவர்கள், 55-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…