பெண் குழந்தைக்கு கொரோனா, ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன் என பெயர் சூட்டல்

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில்,என் குழந்தை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சமயத்தில் தான் பிறந்தான். ஊரடங்கு என்பது தேசிய நலன் மீதான அக்கறை.எனவே எங்களின் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ பெயர் வைக்க முடிவு செய்தோம் என்று கூறினார். இதேபோல் கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா என்று பெயர் சூட்டியுள்ளனர்.இது குறித்து குழந்தையின் மாமா கூறுகையில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதால், குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று கொரோனா என்று பெயர் வைத்ததாக கூறினார்..
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025