திருமணமாகி 4 நாளில் மணமகன் உயிரிழந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில், மணமகள் உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபிரோசாபாத் எனும் மாவட்டத்தில், 10 நாட்களுக்கு முன்பதாக திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் முடிந்து 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், மணமகன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்ததற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் திகைத்து உள்ளனர். இந்நிலையில், மணமகளின் அறிவுறுத்தலின் பெயரில் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது மணமகள், உயிரிழந்த மணமகனின் தாயார், சகோதரி உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று இருந்ததால் தான் மணமகன் உயிரிழந்திருப்பாரோ எனும் சந்தேகத்தில் அந்த கிராமத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…