ஆந்திராவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 7.20 லட்சத்தை நெருங்குகிறது!

ஆந்திராவில் மேலும் 6,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது.
இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,19,256 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,981 ஆக உள்ளது. மேலும் 7,084 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,58,875 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி 54,400 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.