உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் அரசு காப்பகத்திலுள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேர் கருவுற்றுள்ளதாக கூறப்படுகிறது .
உத்திரம் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு நடத்தி வரும் காப்பகத்தில் ஆதரவற்ற சிறுமிகள் உட்பட பல பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 5 பேர் கருத்தரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.அந்த 5 பேரில் இருவர் சிறுமிகள் மற்றும் அதில் ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது . இவர்கள் யாவரும் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், 5 பெண்களும் காப்பகத்திற்கு வருவதற்கு முன்பே கருத்தரித்து இருந்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரம்மதேவ் தெரிவித்துள்ளார்.
தற்போது கான்பூரில் ஸ்வரூப் நகரில் உள்ள அந்த காப்பகம் சீல் வைக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கருத்தரித்த 5 பெண்களில் 3 பேர் ராமா மருத்துவ கல்லூரியிலும், இருவர் ஹாலெட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் உறுதி செய்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…