இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 298 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 63 மற்றும் கேரளாவில் 40 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த 12 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கண்ணூர் 3, காசராகோடு 6, எர்ணாகுளம் 3 என மொத்தம் 12 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசாங்கம் சொல்லவதை மக்கள் பின்பற்றாமல் கூட்டமாக கூடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது என்று இருந்தால் 144 தடை அறிவிக்க கூட தயங்கமாட்டோம் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…