இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால், மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைககள் எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் கேரளா 2ம் இடத்தில் உள்ளது. கேரளாவில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் ரூ.2,000 கோடி வறுமை ஒழிப்பு திட்டமான குடும்பஸ்ரீ மூலம் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 2 மாதத்திற்கான நலத்திட்ட ஓய்வூதியத்தை இந்த மாதமே வழங்க வேண்டும் என்று அறிவித்தார். நலத்திட்டம் ஓய்வூதியம் பெற தகுதியில்லாத குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க, ரூ.1,320 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்க ரூ.100 கோடியும், ரூ.20 குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக ரூ.50 கோடியம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பின்னர் சுமார் ரூ.14,000 கோடி கடன் நிலுவையை மாநில அரசு ஏப்ரல் மாதத்திற்குள் கட்டிமுடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…