இந்தியாவில் ஒரே நாளில் ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு – பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 3,766,108 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66,460 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் புதிதாக 78,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,025 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 800,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.