உலக அளவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா.
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பால் புதிதாக 79,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 960 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 781,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 3,619,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64,617 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா அதிகரிப்பு தினசரி அதிகரித்துக் கொண்டே செல்வது இரண்டாவது நாளாக இந்தியா இன்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 17 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயர்ந்த கொரோனா பாதிப்பு 77,299 ஆக தான் இருந்தது. ஆனால் இந்தியாவில் அமெரிக்காவை விட அதிக அளவில், நாளுக்கு 79,457 பேர் என்ற கணக்கில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. குணமாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் இறப்பு விகிதமும் பாதிக்கப்படுபவர்கள் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாடே அச்சப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…