உலக அளவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா.
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பால் புதிதாக 79,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 960 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 781,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 3,619,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64,617 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா அதிகரிப்பு தினசரி அதிகரித்துக் கொண்டே செல்வது இரண்டாவது நாளாக இந்தியா இன்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 17 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயர்ந்த கொரோனா பாதிப்பு 77,299 ஆக தான் இருந்தது. ஆனால் இந்தியாவில் அமெரிக்காவை விட அதிக அளவில், நாளுக்கு 79,457 பேர் என்ற கணக்கில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. குணமாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் இறப்பு விகிதமும் பாதிக்கப்படுபவர்கள் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாடே அச்சப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…