தன் தாய் இறந்த செய்தி கேட்டும் கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியை தொடர்ந்து செய்த சுகாதார அதிகாரி.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகளவில் இதுவரை கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,370 ஆகவும், பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,458 ஐ எட்டியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,373 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். மேலும் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா எதிரொலியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது. இந்த நிலையில் அதிக மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதில் பல ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தாய் இறந்த செய்தி கேட்டும் பணியை தொடர்ந்து செய்த சுகாதார அதிகாரியின் கதை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் துப்பரவு பொறுப்பாளராக இருக்கிறார். இவரை போபால் பகுதிகளுக்கு உட்பட வீடுகளுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது அவரது தாய் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து கஷ்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, தொடர்ந்து பணியாற்றி முடிந்த பிறகே தாயின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவரின் தாயை விட மதிப்புமிக்க எதுவுமில்லை. ஆனால் தாயிக்கு அடுத்து தாய் நாடு என்றும் காலை 8 மணியளவில் தாயின் இறப்பு குறித்த தகவல் அறிந்தேன். இறுதி சடங்கிற்கு மதியம் சென்று விட்டு, மீண்டும் பணிக்கு வந்துவிட்டேன் என தெரிவித்தார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago