“உலக நாடுகள் பேசும் வகையில் டெல்லியில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளது”- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Default Image

உலக நாடுகள் பேசும் வகையில் டெல்லியில் கொரோனோ வைரஸின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. அந்தவகையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் பொருளாதாரத்தை வளர்க்கும் விதமாக, காணொளி மூலம் வார்த்தைகளிடையே ஆலோசனை நடத்தினார்.

அப்பொழுது அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தலைநகர் டெல்லி முன்மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்த அவர், உலக நாடுகள் பேசும் வகையில் டெல்லியில் கொரோனோ வைரஸின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரு முறை மட்டுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதன்பின் படிப்படியாக ஜூன் 1 முதல் அனுமதியளித்துள்ளதாகவும், மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படாத ஒரே நகரம் டெல்லி தான் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்