கொரோனாவை வென்ற தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,371 ஆக அதிகரித்துள்ளது. அதில் 6,940 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,643 ஆக அதிகரித்துள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,298 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 256 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியில் கடந்த 10 நாட்களாக, கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…