ஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் – ஐ.சி.எம்.ஆர்

Default Image

கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் ஆன்டிபாடிகள் குறையத் தொடங்கியவுடன் மீண்டும் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு உருவாகும் ஆன்டிபாடிகள் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று ஐ.சி.எம்.ஆரின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கூறினார்,

ஆனால், இன்று மத்திய சுகாதார அமைச்சின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ஆன்டிபாடிகள் உடலில் இருந்து குறையத் தொடங்கினால்  மீண்டும் தொற்றுநோயால் தாக்கக்கூடும் என்று கூறினார்.

மேலும், ஒருவர் மனநிறைவு அடையக்கூடாது என்றும், முகக்கவசம் அணியவும் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்