எல்லை பாதுகாப்பு படையினரை தாக்கிய கொரோனா! 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

திரிபுராவில் 12 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. அந்த வகையில், இதுவரை உலக அளவில், 3,566,805 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,304 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தவரையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திரிபுராவில் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில், 12 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திரிபுராவில் மொத்தம் 14 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 54 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்