மகாராஷ்டிராவில் 23 போலீசாருக்கு கொரோனா உறுதி

Default Image

மகாராஷ்டிராவில் போலீசார் 23 பேருக்கு கொரோனா வைரஸ்  இருப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. போலீசார் மக்கள் கூடுவதை தடுக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை கொரோன வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள  மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா ஆகும் .இந்த மாநிலத்தில்  மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மகாராஷ்டிராவில் போலீசார் 23 பேருக்கு கொரோனா வைரஸ்  இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்  அளிக்கப்பட்டு வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்