நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,498 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவைர கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 2,04,832 லிருந்து 2,08,330 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,97,540 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,50,86,878 லிருந்து 1,53,84,418 ஆக அதிகரித்துள்ளது என்பது மன உறுதியை அளிக்கிறது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,70,228 ஆக உள்ளது.
மேலும், இந்தியாவில் இதுவரை 15,22,45,179 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…