இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் ஒரே நாளில் 3,82,315 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 3.68 லட்சம், நேற்று 3.57 லட்சகமாக இருந்த பாதிப்பு இன்று 3.82 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 2,02,82,833 லிருந்து 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல, ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 3,780 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,22,408 லிருந்து 2,26,188 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 3,38,436 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,66,13,292 லிருந்து 1,69,51,731 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 81.91% ஆகவும், உயிரிழப்பின் விகிதம் 1.10% ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் 34,87,229 பேர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரே நாளில் 40,096 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…