இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 15,609,004 உயர்ந்துள்ளது. நேற்று வரை 2.5 லட்சத்தை கடந்து வந்த கொரோனா இன்று 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,86,276 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,32,69,863 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,020 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182,570. ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,31,06,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நாடு முழுவதும் 26,94,14,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலகாபாத் மற்றும் சூரத் போன்றவை கிட்டத்தட்ட மருத்துவமனை படுக்கைகள் இல்லாமல் போய்விட்டன. ஐ.சி.யூ க்கு நோயாளிகள் மாற்றப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.
டெல்லி:
டெல்லியில் உள்ள பல அரசு மருத்துவமனைகள் செவ்வாயன்று தங்கள் ஆக்ஸிஜன் இருப்பு சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்திருந்தது.கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 28,395 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா:
இதற்கிடையில்,மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கிற்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 62,097 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்கள் மகாராஷ்டிரா (3,960,359), கேரளா (1,197,301), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), ஆந்திரா (942,135).
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…