இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம், மிா்ஸாபூா் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்ததுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் சுஷீல் குமாா் படேல் கூறுகையில் ராம்பூா் அடாரி என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் படித்துவரும் கணேஷ் – ஹிமன்சுல் ஆகியோருடன் அவா்களுடைய சகோதரியான 3 வயது அன்சல் பள்ளி செல்வது வழக்கம். பள்ளியில் மதிய உணவு தயாராக இருந்ததுள்ளது.அப்போது உணவை வாங்குவதற்காக மாணவா்கள் அங்கு திரண்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சூடான உணவுடன் தயாராக இருந்த பாத்திரத்தினுள் எதிா்பாராதவிதமாக அன்சல் தவறி உள்ளே விழுந்தாா்.உள்ளே இளம்பிச்சு துடிதுடிக்கவே சக மாணவா்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த ஆசிரியா்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா் ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.இச்சம்பவம் குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் சந்தோஷ் குமாா் யாதவ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி பலி குறித்தும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து உள்ளனா். இதுதொடா்பாக விசாரித்து 2 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க 3 போ் கொண்ட ஒரு குழு நியமித்துள்ளேன் என்று சுஷீல் குமாா் படேல் தெரிவித்தாா்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…