“ட்விட்டர் பறவையை சமைத்து, டெல்லிக்கு பார்சல்” – காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் மகன் வினோத எதிர்ப்பு..!வீடியோ உள்ளே..!

Published by
Edison

ஆந்திராவில் “ட்விட்டர் டிஷ்” உணவை சமைத்து, ட்விட்டர் இந்தியாவின் தலைமையகத்திற்கு  காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி., ஜி.வி. ஹர்ஷ குமாரின் அவர்களின் மகனான ஜிவி ஸ்ரீ ராஜ் பார்சல் அனுப்பியுள்ளார்.

டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களின்ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.காரணம்,பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டன.குறிப்பாக,காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் , “ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் நமது அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் நமது அரசியலை வரையறுக்க தனது வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறது. ஒரு அரசியல்வாதியாக நான் அதை விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல். ட்விட்டர் நடுநிலையானது அல்ல அது ஒரு அரசு சார்புடையது என தெரிந்துள்ளது.ஏனெனில்,ஆட்சியில் உள்ள அரசு சொல்வதைத்தான் ட்விட்டர் நிறுவனம் கேட்கிறது” என மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து,ஆகஸ்ட் 14 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகளும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.இறந்த பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து படங்களைப் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தரப்பில் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பித்த பிறகு கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கியதைக் கண்டித்து,ஆந்திராவில், ட்விட்டர் லோகோவில் இடம்பெற்ற பறவையை போன்ற ஒன்றை (ட்விட்டர் டிஷ்) எண்ணெயில் போட்டு சமைத்து,டெல்லியில் உள்ள ட்விட்டர் இந்தியாவின் தலைமையகத்திற்கு  காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி., ஜி.வி. ஹர்ஷ குமாரின் மகனுமான ஜிவி ராஜ் பார்சல் அனுப்பியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“இதை அனைவரும் பார்க்க வேண்டும். இது ட்விட்டர் பறவை.காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாங்கள் ட்விட்டர் பறவையை வறுக்கிறோம். ட்விட்டர் நிறுவனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கி எங்கள் ட்வீட்களை விளம்பரப்படுத்தாமல் தவறு செய்துவிட்டீர்கள். எனவே இதை வறுத்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்புகிறோம்”,என்று கூறினார். அப்போது அவரைச் சுற்றியுள்ள காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸைப் புகழ்ந்து கோஷங்கள் எழுப்பினர்.மேலும்,அவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை அடைந்து அங்குள்ள அதிகாரியிடம் சமைத்த உணவு பார்சலை ஒப்படைத்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
Edison

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago