ஆசிரம பெண்ணை பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு.
கடந்த 2013 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆசிரம பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சுய பாணி கடவுள் என்று அழைக்கப்படும் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2013-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை குறித்த விவரங்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை அகமதாபாத்தின் புறநகரில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, ஆசாராம் பல சந்தர்ப்பங்களில் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வட மாநிலங்களில் பிரபலமான சாமியார் ஆசாராம் பாபு (வயது 72) இவருக்கு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…