சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி – குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Default Image

ஆசிரம பெண்ணை பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத் நீதிமன்றம்  தீர்ப்பு.

கடந்த 2013 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆசிரம பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சுய பாணி கடவுள் என்று அழைக்கப்படும் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2013-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை குறித்த விவரங்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை அகமதாபாத்தின் புறநகரில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, ஆசாராம் பல சந்தர்ப்பங்களில் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வட மாநிலங்களில் பிரபலமான சாமியார் ஆசாராம் பாபு (வயது 72) இவருக்கு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்