நபிகள் குறித்து சர்ச்சை கருத்து:நுபுர் சர்மாவுக்கு மும்பை காவல்துறை அனுப்பிய சம்மன்!

Default Image

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இதனைத்தொடர்ந்து,நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்,பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் ட்விட் செய்ததாக பாஜகவின் நவீன் குமார் ஜிண்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.நபிகளை குறித்து விமர்சனம் செய்து அவர் ட்விட் செய்து இருந்ததாகவும்,அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

எனினும்,இவர்களுக்கு எதிராக இசுலாமிய நாடுகள் மத்தியில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.இந்நிலையில்,நுபுர் சர்மாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.அதில்,”முகமது நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு,வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்