Categories: இந்தியா

மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்தது தொகுதி பங்கீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

Maharashtra: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் களத்தை பொறுத்தவரை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, சுனில் தாட்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் உள்ளது.

அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு மற்றும் காங்கிரஸ் ஆகிய இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிவாகாமல் இருந்து வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இழுபறி நீடித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அதாவது இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவு 21 இடங்களில் போட்டியிடுகிறது.

இதுபோன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு 10 தொகுதிகளிலும், அகில இந்திய காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரத்பவார், உத்தவ் தாக்ரே மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படேல் ஆகிய 3 பேரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

Recent Posts

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

7 minutes ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

8 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

9 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

10 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

10 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

11 hours ago