Keralagovernor [Imagesource : TheWire]
புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்று கொண்டிருந்த போது, ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல என்றும், மாறாக வேண்டுமென்றே தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு..!
மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தால், போராட்டக்காரர்கள் இருக்கும் கார்கள் அங்கு அனுமதிக்கப்படுமா? போலீசார் யாரையும் முதலமைச்சரின் கார் அருகே வர அனுமதிப்பார்களா? என்னை உடல்ரீதியாக காயப்படுத்த சதி செய்ய இவர்களை அனுப்புவது யார் என்றால் முதல்வர் தான், நான் தெளிவாகச் சொல்கிறேன்.
அவரது வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த கவர்னர் கான், கேரளாவில் ஜனநாயகம் சீரழிந்து வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தம்மை நோக்கி கறுப்புக் கொடியை அசைத்தது மட்டுமல்லாமல், இருபுறமும் அவரது வாகனத்தைத் தாக்கியதாகவும் திரு கான் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், நான் என் காரில் இருந்து இறங்கினேன். பிறகு ஏன் ஓடிவிட்டார்கள்? காவல்துறைக்கு இவர்கள் இருந்தது குறித்து தெரியும். ஆனால் முதல்வர் அவர்களை வழிநடத்தும்போது ஏழை போலீஸ் என்ன செய்வார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…