மகாராஷ்டிரா சட்டப்பேரவை : சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர்

Default Image

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வாகிறார்.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா என்ற மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.இந்த கூட்டணியின் சார்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

முதலில் பாஜகவின் இடைக்கால சபாநாயகரை நியமிக்கப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பின்னர் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நிலையில்  சட்டசபையின்  தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ  திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டார்.

அப்போது மகா விகாஸ் அகாதி கூட்டணி கூட்டணி சார்பில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இந்த வாக்கெடுப்பில் சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது.எனவே புதிய சபாநாயகரை தேர்தெடுக்க இன்று நடைபெற்றது.இதற்காக பாஜக சார்பில் கிஷன் கத்தோரேவும்,மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலேவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.ஆனால் பாஜக வேட்பாளர் கிஷன் கத்தோரே கடைசி நேரத்தில் வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.இதன் காரணமாக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வாகிறார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்