பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 7-ஐ கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, சென்ற பிப்.14ம் தேதி, 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேத்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது என கூறப்பட்டது.
இதில் மொத்தம் 9,222 பேர் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் 2,037 பேரும், பாஜக சார்பில் 1,003 பேரை தேர்தலில் போட்டியிட்டனர். இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முனிசிப்பாலிட்டிகள் அனைத்தையும் காங்கிரஸ் கைப்பற்றி, பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடந்த இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் அரியானா போன்ற மாநில விவசாயிகள் தான் அதிகளவில் வேளாண் சட்டத்துக்கு எதிராக பங்கெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, அபோஹர், பதிந்தா, கபுர்தலா, ஹோஷியார்பூர், பதான்கோட், மோகா மற்றும் பட்லாவை ஆகிய 7 மாநகராட்சிகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…