பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 7-ஐ கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, சென்ற பிப்.14ம் தேதி, 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேத்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது என கூறப்பட்டது.
இதில் மொத்தம் 9,222 பேர் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் 2,037 பேரும், பாஜக சார்பில் 1,003 பேரை தேர்தலில் போட்டியிட்டனர். இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முனிசிப்பாலிட்டிகள் அனைத்தையும் காங்கிரஸ் கைப்பற்றி, பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடந்த இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் அரியானா போன்ற மாநில விவசாயிகள் தான் அதிகளவில் வேளாண் சட்டத்துக்கு எதிராக பங்கெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, அபோஹர், பதிந்தா, கபுர்தலா, ஹோஷியார்பூர், பதான்கோட், மோகா மற்றும் பட்லாவை ஆகிய 7 மாநகராட்சிகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…