மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. 288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் , காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கூட்டணிக்கட்சிகளான சிவசேனா மற்றும் பாஜக இடையே ஆட்சி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜக அழைத்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். போதிய ஆதரவு கிடைக்காததால் அதை நிராகரித்தது.பின்னர் சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதை தொடர்ந்து சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதனால் இன்று காங்கிரஸ் சோனியாகாந்தி வீட்டில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சிவசேனா ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரவு கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…