தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவை தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது.
வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
இதனிடையே, வேளாண் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஷிரோமணி அகாலிதளம் கடந்த சனிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவது இது மூன்றாவது முறை ஆகும். இது தொடர்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டெரெக் ஓ பிரையன் ஒரு ட்வீட்டில் கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். அதில், “சுக்பீர் சிங் பாடல் மற்றும் விவசாயிகளுடன் அகாலி தளத்தின் நிலைப்பாட்டிற்கு நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளுக்காக போராடுவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியாகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டில், மம்தா பானர்ஜி விவசாயிகளின் உரிமைகளுக்காக வரலாற்று சிறப்புமிக்க 26 நாள் விரதத்தில் தனது உயிரைப் பணயம் வைத்தார். மாநிலங்களின் பங்கு, MSP, PDS மற்றும் கொள்முதல் ஆகியவற்றிற்கு ஆபத்தை விளைவிப்பதால் நாங்கள் இதை எதிர்க்கிறோம் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…