[Image source : Mint]
மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டு இருக்கும் போது காங்கிரசை பிரதமர் அமைதியின் எதிரி என கூறுகிறார். – கபில் சிபில் டிவிட்டரில் கடும் விமர்சனம்.
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறை அதிகமாகி கொண்டு இருக்கிறது. அங்கு வசிக்கும் ஒரு பிரிவினரை எஸ்டி பிரிவில் சேர்க்க அரசு முன்னெடுத்த போது, அதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தற்போது இந்த சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை பார்த்து ‘அமைதிக்கு எதிரானவர்கள்’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், அதே வேளையில் இங்கு மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. தேவாலயங்கள் எரிக்கப்படுகின்றன. மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார் .
மேலும் , 2014 முதல் 2022 வரை 5415 ஜாதி கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. உத்தர பிரதேசத்தில் 10900 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. என குறிப்பிட்டு பாஜக எதனை அமைதி என்கிறது என கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலங்களவை எம்.பி கபில் சிபில் பதிவிட்ட இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…