ஜவர்ஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரல்ட்டு நிறுவனத்தை கடந்த 2008ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. அதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பெயரில் அமலாக்கத்துறை கடந்த வருடம் விசாரணையை தொடங்கியது.
இதன் பெயரில் நேற்று நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் யங் நிறுவனத்திற்கு சொந்தமான 751.9 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் முடக்கம்! காரணம் என்ன?
இந்த முடக்கத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், அமலாக்க இயக்குனரகத்தால் ஏஜேஎல்-ன் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள், நடந்து வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவின் பயத்தை தெளிவாகக் காட்டுகின்றன.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தோல்வியை காணப்போகும் பாஜக அரசு, தனது ஆதரவார்களான அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி உள்ளது. இந்த முயற்சியும் தோல்வியடைந்து, தேர்தலிலும் பாஜக தோல்வியடையும்.
நேஷனல் ஹெரால்டு நிறுவனமானது சுதந்திர இயக்கத்தின் குரல். இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திர இயக்கத்தில் பங்குபெற்றதற்கு பெருமை கொள்கிறது. நேஷனல் ஹெரால்டு நாளிதழின் தலைமை பகுதி குறிப்பில் பண்டித நேருவின் குறிப்பேடுகள் நமக்கு நினைவிற்கு வருகிறது. சுதந்திரம் தற்போது ஆபத்தில் உள்ளது. அதை உங்கள் முழு பலத்துடன் பாதுகாக்கவும் என குறிப்பிட்டு இருந்தார் ஜவஹர்லால் நேரு.
நமது ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட இலட்சியங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…