காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்தார் ராகுல் காந்தி.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூருவில் வாக்களித்தார். இதுபோன்று மற்றொரு வேட்பாளரான சசி தரூரும் தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி வாக்களித்தார். இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்னகல்லு கிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…