தகுதி இல்லாத மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் ஒற்றுமையுடன் போராட வேண்டும் -கபில் சிபில் ..!

Published by
murugan

காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை. காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை என கபில் சிபில் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியும், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், காங்கிரஸில் யார் முடிவெடுக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் கட்சியை எப்படி வலுப்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு இன்றைய நிலையில் முழு நேர தலைவரே இல்லை. கட்சியில் இப்போது முடிவுகளை எடுப்பவர்கள் யாரென்பது தெரியவில்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை  கூட்டினாலாவது கருத்துப் பரிமாற்றத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போராடக்கூடிய கட்சி காங்கிரஸ் கட்சி ஒன்று என்று கபில் சிபில் தெரிவித்தார். கொள்கைகளை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற கூடியவர்கள் அல்ல நாங்கள்.

இந்தியாவை காப்பாற்றக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு நாட்டின் அடித்தளத்தையே அழுத்திக்கொண்டிருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் வெளிப்படையான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மத்திய தேர்தல் குழு இருக்கிறதா..? அடித்தளத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்த அமைப்பு உள்ளதா..?  காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாளர்களின் கருத்துக்களுக்கு தலைமை செவிமடுக்க வேண்டும் என்று சிபில் வலியுறுத்தியுள்ளார்.

எந்த நாட்டின் ஆட்சியிலும் அல்லது எந்த கட்சியிலும் ஏகபோகமான அதிகார மையம் இருக்க முடியாது. மத்தியில் 20 பேர் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தை செயல்படுத்த முடியாது என்றார் மகாத்மா காந்தி,  ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களால் அடித்தளத்திலிருந்து ஜனநாயகம் கட்டமைக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி கூறியதை நினைவில் கொண்டு கட்சிக்கு எது நல்லதோ அதை செய்ய கபில்சிபில் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை. காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது. மக்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அரசு விற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டின் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் இருப்பது தான் வருத்தம் தருகிறது.

ஒரு நாளைக்கு கூட பதவியில் தொடர தகுதி இல்லாத மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை ஒற்றுமையுடன் போராட வேண்டும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

6 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

6 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

8 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

8 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

8 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

9 hours ago