இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியது. அதில், ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் போன்ற முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மாலை 3 மணி அளவில் மக்களவை தொடங்கியது. அப்போது, இந்திய எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, அமைச்சரின் ராஜ்நாத் சிங் அறிக்கையை தொடர்ந்து, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தினர். கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காந்தி சிலைக்கு முன்பு காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…