இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியது. அதில், ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் போன்ற முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மாலை 3 மணி அளவில் மக்களவை தொடங்கியது. அப்போது, இந்திய எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, அமைச்சரின் ராஜ்நாத் சிங் அறிக்கையை தொடர்ந்து, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தினர். கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காந்தி சிலைக்கு முன்பு காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…